நீ வந்த பின்புதான் என் வாழ்க்கை
எனக்கே அழகாய் மட்டுமில்லை ...
அர்த்தமுள்ள தாகவும் தெரிகிறது.. ..
சண்டை போடும் போது தெரியவில்லை
உன் வலிமை...விட்டு பிரியும் போது
அதிகமாய் தெரிகிறது உன் வலிமை.....
கடந்த கால நாட்களை ... நினைக்கிறேன்...
சாதாரண நிகழ்வுகள் தான் அவை..
நினைவுகள் ஆகும் போது
தான் அழகாய் தெரிகிறது....
நட்பை நான்கு வரிகளுக்குள்
அடக்க தெரியாமல் அலை பாயும்
உன்னுடனான என் நட்பு...
1 comment:
mmm romba naalla irukku mohan...
keep it up....
Post a Comment