நண்பர்கள்

Monday, September 17, 2012

வெள்ளையாய் சில இரவுகள்



வேண்டிய அனைத்தும்
வரிசையாய் நிற்க
ஒவ்வொன்றாய்
நிறைவேற்றினாள்
குழந்தை
கோவிலில்

0-0

மதியம் மூணு மணி
வரை நிற்கும்
உணவு வரிசை
கொடுப்பவனுக்கு வயிறு
இல்லையோ என
சிந்திக்க வைக்கிறது
சாப்பிட்ட மனது
0-0

களித்து பேச
ஒன்றுமில்லா
தருணங்களில்
“மச்சான் அப்புறம்”
வந்து தாங்கி
நிற்கிறது இங்கே
பல நட்புகளை
0-0
சொல்ல விரும்பும்
பல வரிகள்
ஓரிரு சொல்லின்
முடிவிலேயே இறந்து
விடுவதால்
உணர்ச்சியற்ற உணர்வுகளால்
நிறமற்ற நீர் ஊற்றி
எழுதப்படுகிறது இங்கே
காதல் வரிகள்

0-0

சுகம் பெற்றபின்
தூர எறிவது வாடிக்கை
அவன் சில
வாக்குறுதிகளையும்
அவள் பல
வாய் சண்டைகளையும்

செவ்வாய் வாழ்த்துக்களுடன்

- மோகன் தாஸ்



Wednesday, September 12, 2012

நிழல் தேடும் வெயில்

எப்பொழுதும்
மௌனத்தை தாங்கும்
உன் நிழல் என்
பின்புலம் அறைய
நிறமற்ற வெளிகள்
அனைத்தும்
கிறுக்கும்
அழியா நாட்குறிப்புகளை
அடுக்கி வைத்து
உயிர் வாழ்வது
என் கடமை

-௦-௦-

வரிகள் வரைந்து
எழுதும் செப்புக்கவிதை
காற்றோடு கரைய
உன்னை பார்த்து
பூத்துக்கிடக்கும்
ஒற்றைக்கால் பூமி
தடவும் வெக்கமில்லா
மேகம் நான்
-௦-௦-

புரிந்து பேச நான்
அறிமுகமில்லா பிறைகவிஞன்
சிரித்து பேசி
களவு புரியும்
இடைதெரு
விலாக்கம்பனும்
நீயே என் பிச்சை என
ஒருவன் கருஅதிர கத்தும்
மீதியில்லா எச்சம்

-௦-௦-

சத்தமில்லா உடுப்பு
ஒன்றை
மேலே சாத்திவிட்டு
விளகினுள் எரியும்
திரி கதிரை விளக்கம் கேட்டு
குறி ஒன்றை
சொல்லி செல்லும்
அறுபது கிழவி
என்ன செய்வாள்
கூறு போட நான் இங்கே

Thursday, August 9, 2012

சலித்து போன அலைகள்



தினம் கொட்டும்
இலைகளுக்கு
பிரிவின் அருமை
தெரியதொடங்கியபோது
மரம் முழுதாய்
இறந்திருந்தது

%%


முந்தி வரும் சிறு
அலையும்
பின்னால் வரும்
பெரிய அலையும்
தேடி சலித்திருந்தது
அனிதா குட்டி
தொலைத்த
கரடி பொம்மையை



%%


செதுக்கியவன்
கெஞ்சி கேட்ட
கடன் பற்றி பின்னிரவில்
பேச தொடங்கியிருந்தது
சிலை
முதலாளியிடம்




%%

ரசித்து கேட்ட இளையராஜா
பாடல் எதிர் வீட்டு
குக்கரின் நான்காவது
விசில் பட்டு பலமான அடி
லேசான காயத்துடன்
இசை நலம்


%%

வெறுமை
பட்டு வெளுத்து
போயிருந்தது
பூட்டியே கிடக்கும்
கொல்லைபுற
தாழ்வரை

Tuesday, August 7, 2012

எட்டாவது காதல்




ஏன் முறைக்கிறாய்
தமிழ் உனக்கு
வராது என்றாய்
தமிழ் நீ வா
என்றேன்

௦-௦-௦

கண்களால் நீ
கணிதம் பற்றி
பேசுவாய்
காதல் பற்றியெரியும்
எனக்கு

௦-௦-௦

நீ எழுதிய
எழுத்துக்கள்
தன்னை விட உன்னையே
அதிகம் ரசிக்கின்றன

௦-௦-௦

உன் கை புத்தகம்
பெரும் மோட்சம்
உன் பை புத்தகம்
பெறுவதில்லை என
என் முகபுத்தகம்

௦-௦-௦

நீ ஒரு கடினமான
வினாத்தாள்
காப்பியடிப்பதற்குள்
கையும் களவுமாக
எனை அணைத்துவிடு
௦-௦-௦


நல்லவனாகவே பதில்
சொல்லி அமர
விரும்பும் நான்
திருடனாகிவிகிறேன்
உனை பார்க்கும்
அரை நொடி

௦-௦-௦

மழைக்கு கூட
ஒதுங்காதவன்
காதலுக்காக
ஒதுங்கியவன்
நான்

௦-௦-௦

நீ ஒன்பது படித்து
பத்து ஆனாய்
நானோ உன்னை படித்து
பித்து ஆனேன்

Wednesday, August 1, 2012

கீழே விழுந்தவை..


இரண்டு எழுத்துகள் மட்டும் என்
கதையிலிருந்து
வெளியே குதித்து
என்னுடன் அருகே அமர்ந்து கொண்டது

என் நினைவுகள் செல்லும் வேகத்திற்கு ஈடு
கொடுத்து பறந்து வந்தன அவை
திடீரென மாய வலையில் சிக்க
என் நினைவுகளோ தண்ணீராய் கீழே சிந்தியது

பிழைத்தோம் என சிரித்தன
என் நினைவுகள்
பறக்க திரும்பும்போது என் கதையில்
அடுத்த இரண்டு
எழுத்துகளை காணோம்

0-0-0

பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது

கடலால் எழுதப்பட்ட காற்று ஒன்று
அருகில் சென்று தன் வார்த்தைகளை
அதனுடன் விளையாட கொடுக்கிறது

வண்டுகள் ஏமாறும் நேரம்
கள்ளக்காதலன் காற்றால்
இழந்து கொண்டிருக்கிறது கற்பை
இன்னுமொரு பிச்சியிடம்
விரும்பித்தான் என காற்று சொல்லும்
என்னிடம் நானும்
அதையே அப்படியே நம்புவேன்

பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது

0-0-0

Monday, July 23, 2012

தமிழ் எனக்கு...





தமிழ் எனக்கு

ஜனனித்த மழலையின்
உள்ளங்கால் ஸ்பரிசம்

பொசுக்கும் வெயிலில்
ஜில்லென்று இரு கை தண்ணீர்

கடுக்க நின்று பார்த்து முடிக்கும்
தெய்வ தரிசனம்

தெரியாமல் தொடங்கி தெரிந்து
தின்னும் பல்ப குச்சி

தொட்டு பார்த்து குட்டி போடும்
நடுப்பக்க மயிலிறகு

இறுக்கமாய் பின்னலிட்ட சிறுமி
ரெட்டை ஜடை

ஆறு விரல் குழந்தையின் பளீரென்ற
அசட்டு சிரிப்பு

வளைத்து போடும் புள்ளி கணக்கு
தெரியா சிக்கு கோலம்

ஆள் அரவமற்ற வெற்றிடத்தில்
எதிர்பாரா ஆக்சிஜன்

தமிழ் எனக்கு....

ஒழுகும் சளி துடைக்கும்
மூணாவது தெரு கறுப்பி முகம்

அறியா பருவம் அள்ளி தரும்
புடிபடா குறுகுறு காதல்

அறுபதில் இருபதை தரும் பால்யகால
குட்டி சுவர்  நட்பு

வலி தந்து சிரிக்க செய்யும்
சிசுவின் கால் அசைவு

அவள் அவசரமாய் மூட முயலும்
அழகு மார்பகம்

விரும்பி அணியும் கோடு போட்ட
காட்டன் சட்டை

எழுபது வயதில் திரும்பி வரும்
குழந்தை மனசு

இடப்பக்க மார்பில் விரும்பி வாங்கும்
கொள்ளு பேரன் கால் உதை

காத்திருந்து அவள் சொன்ன
அந்த "நானும் உன்னை காதலிக்கிறேன்"

தமிழ் எனக்கு....
இன்னும் நிறைய...

Sunday, July 22, 2012

பொய்




நெடுவென வளர்ந்த அந்த
ஒற்றை மின் கம்பம்
சொல்லியிருக்கலாம்
அவள் அடிக்கடி சாய்ந்து கொள்ளும்
கான்கிரிட் மரம் நான் தானென
சாய்ந்துகொண்டே சரிந்து போயிருப்பேன்
*
குழாயடி சண்டை பார்க்கும்
அந்த ஒற்றை அடி பம்பு
சொல்லியிருக்கலாம்
அவள் அதிகம் பிடித்தது
என் கைகளைத்தான் என்று
இது கைகள் அல்ல
கண்களென ஒற்றியிருப்பேன்
*
படையாய் பாசானை வளர்த்திருக்கும்
அந்த படிதுரையாவது
சொல்லியிருக்கலாம்
அவள் பூவுடல் படும்
தேன் நீர் என்னுடையது தானென
ஆயுள் முழுதும் தீர்த்தமாய்
தின்று  தீர்த்திருப்பேன்
*
இடுப்பு பெருத்த அந்த பச்சை மரம்
சொல்லியிருக்கலாம்
அவள் கண்ணாமூச்சி விளையாடியது
என் பின்னால்தான் என்று
என் இறுதிப்பெட்டி உன் வயிற்றால்
தான் என்றிருப்பேன்
*
கைவிடா
அரசமரத்தடி காளியம்மனாவது
சொல்லியிருக்கலாம்
அவள் மனமார வேண்டுவது
என்னை தானென்று
காலமெல்லாம் காவல் சிலையாய்
நின்று இருப்பேன்
*
பேரை சொன்னாலே பெரிய
புன்னைகை யொன்றை தரும் நீயாவது
சொல்லியிருக்கலாம்
உன்னை காதலிக்க இருந்தது நான் தானென
என் காதலி நீ என்று
என் கல்லறையில் வெட்ட சொல்லியிருப்பேன்
*
இறந்தபின் என் கல்லறையவா 
காதல் செய்ய போகிறாய்
பொய் சொல்ல
இனியாவது கற்றுக்கொள் 
காதலெனும் உண்மையாவது 
உயிருடன் இருக்கட்டும்

Saturday, July 21, 2012

மின்னீர் அஞ்சலி




யாருமற்ற வீட்டில் 
ஆர்ப்பாட்டமாய் மாநாடு
இனிதே தொடங்கிது
அழைப்புமணியின் வரவேற்புரையுடன்

மின்விசிறி காற்றுபொழிவாற்ற
தொலைகாட்சி சத்தமாய் தலைமையுரை
தலைப்பு நன்றி விளக்க பொதுகூட்டம் மின்சாரத்திற்கு
அணைத்து  வயர்களும் வரிசையாய் வாழ்த்து
நன்றி உரையை மின்விளக்கு முடிக்கும் போது

திடீரென மின்வெட்டு வெடித்து
அனைத்தும் உயிரிழந்தது இன்று
இரண்டு மணி நேரம் மின்சார அஞ்சலி
நாளை மீண்டும் மாநாடு
பக்கத்துக்கு வீட்டில்

பயம்





கோவில் படிகளில் இறங்கும்போது
இரண்டு ரூபாய் நாணயம்
உருண்டோடுகிறது,
சத்தம் கேட்டு
என்னை யாரும் பார்த்ததாய்  தெரியவில்லை
பின்பக்க தலை அடிபட்டு அது
ரத்தம் சொட்ட சுழல்கிறது
அப்பொழுதும் யார் கண்ணிலும் படவில்லை
என்னை பார்த்து பயந்து விட்டதாய்
அதன் முகம் காட்டியது
முகத்தை குழந்தையாய்
வைத்துகொண்டு சமாதானம் சொல்ல
முயலுவேன்
அது பொய்யான நடிப்பு என்பதை எப்படியோ
உணர்ந்து கொண்ட நாணயம்
ரத்தம் சொட்ட மீண்டும் உருளுகிறது
முடிவில் ஒரு குட்டையில் விழுந்து 
காட்டுகிறது அதன் 
வெற்றிசிரிப்பை  
இன்னும் என்னை யாரும் பார்க்கவே இல்லை 
அவர்கள் பார்த்திருக்கலாம்


Thursday, July 19, 2012

ச்சோவென பெய்யும் காதல்




காணவில்லை நம்மை
கண்டு பிடித்து தருவோருக்கு
தக்க சன்மானம் உண்டு
கவலையாய்
என் காதலும்
உன் காதலும்
                                                                        -0-0-

                                        தெரியுமா உனக்கு 
                                        என் காதல் ஒ பிரிவாம்
                                        உன் காதல் எ பிரிவாம்
                                        நான் எப்பொழுது வேண்டுமானாலும்
                                        தரலாமாம்
                                        முத்தம்

                                                                        -0-0-


இரவில் ஒரு இடப்பிரச் சினை 
உன் கண்ணிமை நடுவில்
ஓர் இடம் தருகிறாய்
காதல் குழந்தை சுகபிரசவம்
கண் திறப்பாய் காலை
இருப்பது தெரியாமல்
காதலை வைத்து விட்டு
வெளியில்
விழுந்து  விடுகிறேன்
நான்

                                                                        -0-0-


உன் கண் வழியே 
செல்லும் என் காதல் 
என் உதடு வழியே
வெளியேற துடிக்கும் 
நம்
முத்தமாய்

                                                                        -0-0-

                                                நேரில் நீ சென்று 
                                                கனவில் சீக்கிரம் வா 
                                                சிரிக்க மட்டுமே வைக்கிறாய்
                                                அங்கே என்னை 
                                                சிணுங்கவும் வைப்பாய் 

                                                                        -0-0-
உன் தோழி காதலுக்கு 
நீ மாங்காய் ஊறுகாய் 
என் தோழன் காதலுக்கு 
நான் பழைய சோறு 
நம் காதல் பசி 
கண்ணை கட்டும் 
நாள் தோறும்

                                                                        -0-0-

ஒரு மணி நேரம் 
பிரியவேண்டுமா
சின்ன முள் 
பெரிய முள்ளிடம் 

                                                                        -0-0-

                                                உன்னை தெரியுமென 
                                                யாரேனும் 
                                                என்னிடம் சொன்னால் 
                                                என்னை மறந்து 
                                                நீயாகிவிடுகிறேன்   
                                                நான் 



                                                                        -0-0-
தூண்டில் முள்ளாய்
நீ
துடிக்கும் மீனாய் 
நான் 
தண்ணீரில் விடுவாய் 
என நான் 
எண்ணையில் விட்டாய்
நீ 
அவ்வளவு பிடிக்குமா     
என்னை 


                                                                        -0-0-


திரைஅரங்கில்
திட்டு 
முன்னே இருப்பவனுக்கு
மனைவி அருகில்
திட்டு 
பின்னால் இருப்பவனிடமிருந்து 
காதலி அருகில்

                                                                        -0-0-

Friday, July 13, 2012

சீட்டுக்கட்டு…


வெள்ளையாய் மஞ்சளாய் சிவப்பாய்
நிறமேற்றி விதவிதமாய் படம் கொண்டு
அட்டையில் என்னை வழிபடும்
கட்டை கடவுள்கள் இங்கே பலர்
இன்னும் பல திண்ணையோரம்


பதின்மூன்றாய் எனை அடுக்கி
பல பேர் எனை தடவி சுகம் என்று
நினைத்துகொண்டு ராப்பகலாய் இங்கிவன்
தனக்குமொரு குடும்பம் என்று
இருக்குமென நினைவில்லை நான் பேச வழியுமில்லை


ராஜா நான் ராணியும் நான்
பத்து வரை அடுக்கி பார்த்து
கட்டமொன்று சேரவில்லை எனை
திட்டி தீர்த்து விட்டு செல்ல
மனமுமில்லை விடாமுயற்சி இங்கே மட்டும்


ஜோக்கர் ஒன்று சேரும் வரை
ஜோடிபுறா பறந்து போகும்
சேர்ந்தவுடன் திரும்பி வந்து
முக்கூடணி ஒன்று முடிவு செயும்
இவர் ஜோக்கர் அல்லா வேறு யாரோ


சோளக்கஞ்சி பார்த்து கொஞ்சம்
நாளானது அந்த மண்பானை
கூலிவேலையில் மனமில்லை
பெத்த ஆத்தா பிழைப்பு தேடி
வேலைசெய்ய இவனிங்கே என்ன செய்ய


பெத்த பிள்ளை படித்து வர
பிச்சை உன்னை கேட்கவில்லை
வட்டி வாங்கி அனுப்பிவைக்க
வழியொன்று கண்டு சொல்ல
வாயுமில்லை என்ன செய்ய


பெட்டி சேர்த்த பணமுன்னை
கெஞ்சி கேட்டு கொள்வேன் இனி
உன்னை வேண்டி என்னை தொடும்
இவன் மண்ணை தோண்டும் நாள்
சொல்ல தூது செல்ல மாட்டாயோ

Thursday, July 12, 2012

மண்ணில் விழா மழை...


வேலை தேடி
வரிசையில் நிக்கும் போது
மிகவும் வலித்தது
மனசு
வேலை விற்றாகிவிட்டதாம்
காசுக்கு

******

நடு நிசி நாயை
கல்லெறிந்தும் விரட்டுவாள்
வீட்டிற்கு காவல் வைக்கவும்
விரும்புவாள் தாய்
எனக்காக

******

நடந்து செல்கையில்
கூடவந்து ஒட்டி கொண்டது
அலுவலில் இருந்த என்
அழையா நினைவுகள்

*****

குடையாய் உன் சீலை
உனக்கு என்பேன்
வெயில் ஒன்னும் செய்யாது
கால் வெடிப்புகளை
மறைத்த படி
மகளாய் வேண்டும் என் தாய்

*****

குளிர் அறையில்
தாங்கமுடியவில்லை
என் நண்பனின்
துயர செய்தி

*****

எப்பொழுது
கூட்டி செல்வாய் என்
அனிதா செல்லம் கேட்பாள்
எங்கே என
சொல்லாமலேயே

******

Tuesday, July 10, 2012

காதல் சொல் வழி..


நான் பேசி
நீ போடும்
சண்டையை பார்த்து
நம் கடைபிள்ளை புரியாமல் அழ
நடுபிள்ளை உனை இழுக்க..
தலை பிள்ளை எனை இழுக்க..
நடக்க வேண்டும் இது
என் கனவு ஆசை


காலைக்கனவு
பலிக்க வேண்டுமாம்
ஆசையை சொன்னால்
காதல் பதிலாம்
கொடுப்பாய் தானே
இதுவும் என் ஆசையே

சிக்னல் சீர்…


சிவப்பாய் வீங்க
என் அண்ணன் தர
மஞ்சளாய் தாலி
என் கழுத்தில் ஏற

பச்சை கொடி
நானும் காட்ட
இனிதே பறக்கும் நம்
பல்சர் திருமணம்

உன் வெள்ளை தந்தை
விஜயம் செய்வார்
வசூல் ராஜா
அடுத்த சிக்னலில்..

Monday, July 9, 2012

பிச்சைகார(ன்) பசி…


சிக்னலில் இளைப்பாறும் சீர்மிகு
வண்டிகள் மத்தியில்
வாளி வாளியாய்
பசியை மட்டுமே உணவாய்
உண்ட பிச்சையின் புலம்பல்

நேற்று மடுகரையில்
மாநாடு சூப்பர் பிரியாணி
கேட்காமலேயே
ஆடை இழந்தது பொட்டலம்
அரை நிர்வாணமாய் இன்று
குப்பை தொட்டியில்

தெரு நாய்கள்
பலத்தை காட்டி போட்ட
போட்டியில் தோற்றது இலை – நேற்று
வாசமாய் இருந்தது இன்று
நாற்றமாய் மூக்கில்லாதவர்களுக்கும்

இன்று எந்த கட்சி
இடத்தை அடைத்து
கொடி கட்டி சப்தம் நிறைத்து
வசை பாடி
கறிக்கஞ்சி ஊற்றும்
இப்போதே என் வயிற்றுக்கு ஆசை

வட்டிக்கு வங்கியோ வயிறோ
வேண்டாம் என்றா சொல்லும்
எட்டே முக்காலுக்கெல்லாம்
எட்டி உதைத்து எழுப்பியல்லவா
நிக்க சொல்லும்

சீக்கிரம் உனக்கான
திட்டுகளை வாங்கிகொள்
என் அன்பு எதிர் கட்சிகளே
என் இரைப்பைக்கு தெரியுமா
உன் எதிர்கால சிந்தனை

கால் கடுக்க நின்னு பார்த்து
கண்ணாடி கதவை தட்டி பார்த்து
கண்ணில் கொஞ்சம் பசியை காட்டி
கையை கொஞ்சம் இறக்கி காட்டி

காசு கேட்டும் பயனில்லை
போட ஒரு மனுஷன் இல்லை
என்னை போல இன்னும் பலர்
தட்டில்லா பிச்சை இவர்

ஒட்டும் வயிறு கொட்டும் பசி
தட்டி கொடுத்தேன் தடவி கொடுத்தேன்
சமாதானம் வேண்டாம்
சாப்பாடு வேண்டும்

நாளை காலை பசிக்கும் எனக்கு
நாலு தெருவும் போக வேணும்
தட்டு பிடிக்க சத்து வேணும்
முடிஞ்சா போடு தர்மம் நீயும்

வாய் நிறைய திட்டி தீர்த்து
கால் நிறைய உதையும் தந்து
பைசா போட வக்கில்லா
ஆட்டோகாரன் எழுதி வைப்பான்

“கவி  பாடுதைவிட
காசு போடுவது உத்தமம்”

Thursday, July 5, 2012

மீள் சட்டையும் கறுப்பு மின்னலும்..


அரை கை சட்டை தைக்கும் போது தான்

அது நடந்திருக்க வேண்டும்

அவனுக்கு அந்த ஞாபகம் வந்தது

சட்டை துணி வெகுண்டெழுந்து நீள்கிறது


இரு கைகளால் தடுத்து பார்த்தான் முடியவில்லை

மீறி செல்கிறது நீருடைப்பை போல

முடிவில் வெகு தொலைவில் ஒரு

காய்ந்த மரத்தின் இலையின்

கைகள் பட்டு நீள்வது முடிந்து போகிறது


மூச்சிரைக்க ஓடி வந்து நின்று

முழுவதும் நிறைத்திருந்த கருப்பு காற்றை

வேகமாய் விலக்க அங்கே

காய்ந்த இலை இல்லை கருப்பு நிற மரமில்லை



கை நீளும் துணியில்லை

நிற்பது தரையுமில்லை

கருப்பு நிற இடி ஒன்றை

வெண்மேகம் வீசி விட்டு செல்லும்

திடுக்கிட்டு விழித்தெழுந்தான் பின்னிரவில்

தண்ணீர் சொம்பு தறிகெட்டு சிரிக்கும்

நடப்பதெல்லாம் தினமும் சகஜம்……



Communities Tagged : Poetry-Stories


Monday, July 2, 2012

காதலியியல் முதலாமாண்டு…

முதல்  முத்தத்தில்

ஒன்றாவது முடித்தேன்…  என்றேன் நான்

இரு முத்தத்தில்

ரெண்டாவது முடித்தேன்…… என்றாய் நீ

இருபது முத்தத்தில்

இளநிலை …..முடித்தேன் என்றேன் நான்

முப்பது முத்தத்தில் 

முதுகலையும் …… முடித்தேன் என்றாய் நீ

காதல் பொறியியல்

படிக்க 100 முத்தம்

ஆகுமேன்றேன்

காதல் மருத்துவம்

படிக்க 1000  முத்தம்

ஆகுமென்றாய்

அவ்வளவு கொடுக்க என்னிடம் இல்லையென்றேன் ..

காதலியியல் படிக்க நீ மட்டும்

போதுமடா என்று செல்லமாய் கொட்டினாய்

புரியாமல் நானும்

புரிந்ததாய் என் முத்தமும் ….

 

Wednesday, June 27, 2012

ரிசல்ட்...



பளீரென்று


ஒன்று கிடைத்தது ..

முதுகில்



தெரிந்து உடைத்த

கண்ணாடியை

தெரியாதவாறு தானே

வைத்தோம்



காய்ந்து போன

சிகிரெட் துண்டு

பற்ற வைத்ததை

பார்த்து விட்டாரோ



உச்சி வெயில்

மண்டை காய

அரச மரம்

ஏறியர்தர்க்கா



குச்சி ஐஸ் வாங்க

நல்ல குடத்தை

கொடுத்தர்க்கா



இலந்தை மிட்டாய்க்காக

விரலை முறித்த

எதிர் வீட்டு முருகனின்

வேலையோ



பொக்கைவாய்

பாட்டி கேட்ட

கொட்ட பாக்கு

வாங்காமல் கம்பி நீட்டி

கல்கோனா வாங்க

கடைதெரு சென்றதலோ



ஒன்றும்

விளங்க வில்லை

ஒய்யாரமாய்

வீடு வரும் வரை..



நேற்று முழு ஆண்டு தேர்வு

ரிசல்ட்





கண்ணாடி வளையல்…





கண்ணாடி வளையல்கள்


அவளுக்கு மிகவும் இஷ்டம்

கால் கடுக்க சென்று சந்தையில்

வாங்கும் போது தெரியவில்லை எனக்கு

நாளையே அவை நொறுக்கப்படும் என்று..

பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது என் மரணம்..


வெட்கப்புன்னகை..





உன்னை விட


உன் வெட்கங்களை தான் அதிகமாக

காதலிக்கிறேன்

எங்கே வைத்திருந்தாய் இவைகளை

எனக்கு தெரியாமல் !!!

காதல் ஸ்பெஷல் ..




1) ஓரப்பார்வை




அந்தி சாயும்

மஞ்சள் வெயில் பொழுதில்,

உன் தோழிகளை போக சொல்லிவிட்டு

எனக்கு மட்டும் தெரியும்படி

ஓரமாய் நீ காட்டும்

அந்த ஒற்றை பார்வைக்காக

எழுதி வைக்கலாம் இந்த

ஈரேழு உலகத்தையும்



2) எப்படி எழுத



திடீரென்று என்னை பார்த்து

சிணுங்கலாய் கேட்டாய்

கவிதை எழுதுவது எப்படி என்று..

நான் சொன்னேன்

நீ கேட்கும் அழகே

தனி கவிதையென்று….

வெட்கத்தில் சிவந்தது

நம் காதல்



கவிதைச்சரம்..


பூமியை
நிலவு சுற்றுகிறதாம்
அதெப்படி ?
நான் அல்லவா
இந்த நிலவை சுற்றுகிறேன்
தினமும் பூமியாய்…

**

தயவு செய்து
பேசும் போது என்னை
தட்டி விட்டு பேசு..
உன்னை பார்த்ததும்
ஆகி விடுகிறேன் சிலையாக …..

**

காற்றுக்கும் எனக்கும் சண்டை …
தொலைபேசியில் நீ தரும்
முத்தத்தை அது வைத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமல்லவா
தருகிறது எனக்கு

**

வெள்ளை நிறத்தில்
உடை அணிவார்களாம் தேவதைகள்
உடன்பாடில்லை எனக்கு
மஞ்சள் நிற தாவணியில் நீ

**

சிற்பிகள் உளியால் வடிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
உதடுகளால் வடிக்க
சிலையாய் நான்

Tuesday, June 26, 2012

மகி கண்ணே…



கை பொம்மையை கதைகள் பேசி தூங்க வைத்து

இறகின் மென்மையாய் பூம்பாதம் வைத்து

பிஞ்சு விரல்களால் ஓவியம் தரித்தது

போதுமென்று ஓய்வெடுக்க சென்றாயோ…



சின்னஞ்சிறு மழலை பேச்சில்

பெற்ற தாயின் சோகம் போக்கும் - பிறி தொருநாளில்

உனை எட்டி பிடிக்க முயன்று முடியாமல் – இன்று

கட்டி பிடிக்க கொடுத்து வைக்கவில்லை, காரணம்

நான் என்று சொல்லாமல் சென்றாயோ….



கதவிடுக்கில் உன்னை கண்டு பிடிக்க

கண் பொத்தி காணமல் போய், கணம் சென்று

கண்டவுடன் கை நிறைய தந்தாயே உன் மழலை நகையை

சிந்தி விட்டேன் என்று என்னை சிதறவிட்டு சென்றாயோ…



இடுப்பு வலிக்கிறேந்தேன்று இறக்கி வைக்க

நினைத்தேன் உனை, உடனே பிரிவாய் என முன்பே

தெரிந்தால் காலமெல்லாம் சுமந்திருக்க

மாட்டேனோ என் முத்தச் சந்தமே. என்மேல்

கோபப்பட்டு என்னுயிரை உன்னுடன் கொண்டு சென்றாயோ….



பூ வாடி விழ இப்பூமி எமன் காரணாமாய் இருந்தால்

இறைவன் இறந்துவிட்டான் என்று ஏளனமாய்

கரைந்து சொல்ல எனக்கொன்றும் தடையுமில்லை

இன்னுமொரு பூவாய் பிறந்திருப்பாய் அதை மறுப்பதற்குமில்லை



காவு வாங்கிய பூமி இன்று உன் கால் பதிக்க ஏங்குமடி

உன் கதறல் கேட்டவுடன் மண்ணிற்கும் மரணம் வந்திருக்கும்

எங்கனம் அழுதிருப்பாய் முடியவில்லை நினைத்தாலே

சிறு கீறல் பட்டாலே உன் உயிர் போகுமடி – எப்படி

பெரும் காயம் உன் பூ உடம்பில் ச்பரிசித்தததோ என் கண்ணே …



யார் சொல் கேட்டு என் பசி மறப்பேன் இனி

யார் முகம் கண்டு எனை நான் மறப்பேன் இனி

யார் விரல் பிடித்து ஒரு கணம் நடப்பேன் இனி

உன்னுடன் வரும் வரம் வேண்டும் நான் வாழ

என்னையும் கொண்டு செல்ல மாட்டாயோ என்னுயிரே



மழலை மகி க்கு இந்த பதிவு சமர்ப்பணம்

Monday, June 25, 2012

ஏளன சிரிப்பு....




இந்தியாவை கொள்ளையடிக்க
வெளிநாட்டிற்கு விற்கப்பட்ட இந்தியர்கள்
நம் கணினியாளர்கள்

முழுவதும் கொள்ளை போன பின்
கொடுப்பார்கள் பார் உயர வைத்தவர்கள்
எனும் பட்டம்..

இதயம் உள்ள இந்தியா சிரிக்கும்
பின்னாளில் ஏளனமாக..

Thursday, June 21, 2012

வெறும் கல்லாய் போன என் காதல்..



கணக்குபிள்ளை வயலில் கொடுக்கா புள்ளி பறிக்க
நீ ஏறி உன் காலில் முள் குத்த
வலி தெரியாமல் இருப்பதாய் காட்ட
வெளியே சிரித்தாய் நீ
உள்ளே அழுதேன் நான்

வெறும் காலால் நடந்தேன் அன்று முதல்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அந்த முள்ளுக்கு தெரியும் என் காதல்…..


யாரிடமோ நீ பிடிக்குமென சொன்ன
அந்த இளஞ்சிவப்பு நிறத்தில்
சட்டை அணிந்து கொண்டு அரச மரத்தடியில்
தினமும் உன்னை எதிபார்த்து உனக்காக நின்றேன்


நீ என்னை பார்க்க மாட்டாய் என தெரிந்தே…
சின்னதாய் ஒரு ஆசை .. “நல்லாயிருக்கு” ஒரு நாளேனும் சொல்வாயென..
உன் மனதிற்கு தெரிய வாய்ப்பில்லை,
அந்த மரத்திற்கு தெரியும் என் காதல்….


நாட்டாமை தோட்ட தென்னந்தோப்பில்
அடி மட்டபாறையில் கல்லால் எழுதினால்
அப்படியே நடக்கும் என்று
செல்லாயி கிழவி சொல்ல

நடு நிசியில் பயந்து கொண்டே சென்றேன் நான்
உன் நினைவுகள் மட்டும் என் வழித்துணைக்கு..
எழுதியது தெரிய வாய்ப்பில்லை,
எழுத்துக்கு தெரியும் என் காதல் …


கால் கிணறு தண்ணீரை கடு மண் சுமக்க
மீதிப்பட்ட வெற்றிடம் என் நினைவுகளால் நிரம்ப
கல் எறிந்து கலைத்தேன்
என் காதலை மறுத்த உன்னை எண்ணி…

எல்லாவும் என்னை பார்த்து சிரிப்பதாய் எனக்கு தோன்றினாலும்,
எனக்கு வரவில்லை அழுகையை தவிர…
தண்ணீரின் உள்ளே வெறும் கல்லாய் என் காதல்