இரண்டு எழுத்துகள் மட்டும் என்
கதையிலிருந்து
வெளியே குதித்து
என்னுடன் அருகே அமர்ந்து கொண்டது
என் நினைவுகள் செல்லும் வேகத்திற்கு ஈடு
கொடுத்து பறந்து வந்தன அவை
திடீரென மாய வலையில் சிக்க
என் நினைவுகளோ தண்ணீராய் கீழே சிந்தியது
பிழைத்தோம் என சிரித்தன
என் நினைவுகள்
பறக்க திரும்பும்போது என் கதையில்
அடுத்த இரண்டு
எழுத்துகளை காணோம்
0-0-0
பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது
கடலால் எழுதப்பட்ட காற்று ஒன்று
அருகில் சென்று தன் வார்த்தைகளை
அதனுடன் விளையாட கொடுக்கிறது
வண்டுகள் ஏமாறும் நேரம்
கள்ளக்காதலன் காற்றால்
இழந்து கொண்டிருக்கிறது கற்பை
இன்னுமொரு பிச்சியிடம்
விரும்பித்தான் என காற்று சொல்லும்
என்னிடம் நானும்
அதையே அப்படியே நம்புவேன்
பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது
0-0-0
No comments:
Post a Comment