தினம் கொட்டும்
இலைகளுக்கு
பிரிவின் அருமை
தெரியதொடங்கியபோது
மரம் முழுதாய்
இறந்திருந்தது
%%
முந்தி வரும் சிறு
அலையும்
பின்னால் வரும்
பெரிய அலையும்
தேடி சலித்திருந்தது
அனிதா குட்டி
தொலைத்த
கரடி பொம்மையை
%%
செதுக்கியவன்
கெஞ்சி கேட்ட
கடன் பற்றி பின்னிரவில்
பேச தொடங்கியிருந்தது
சிலை
முதலாளியிடம்
%%
ரசித்து கேட்ட இளையராஜா
பாடல் எதிர் வீட்டு
குக்கரின் நான்காவது
விசில் பட்டு பலமான அடி
லேசான காயத்துடன்
இசை நலம்
%%
வெறுமை
பட்டு வெளுத்து
போயிருந்தது
பூட்டியே கிடக்கும்
கொல்லைபுற
தாழ்வரை