நண்பர்கள்

Thursday, August 9, 2012

சலித்து போன அலைகள்



தினம் கொட்டும்
இலைகளுக்கு
பிரிவின் அருமை
தெரியதொடங்கியபோது
மரம் முழுதாய்
இறந்திருந்தது

%%


முந்தி வரும் சிறு
அலையும்
பின்னால் வரும்
பெரிய அலையும்
தேடி சலித்திருந்தது
அனிதா குட்டி
தொலைத்த
கரடி பொம்மையை



%%


செதுக்கியவன்
கெஞ்சி கேட்ட
கடன் பற்றி பின்னிரவில்
பேச தொடங்கியிருந்தது
சிலை
முதலாளியிடம்




%%

ரசித்து கேட்ட இளையராஜா
பாடல் எதிர் வீட்டு
குக்கரின் நான்காவது
விசில் பட்டு பலமான அடி
லேசான காயத்துடன்
இசை நலம்


%%

வெறுமை
பட்டு வெளுத்து
போயிருந்தது
பூட்டியே கிடக்கும்
கொல்லைபுற
தாழ்வரை

Tuesday, August 7, 2012

எட்டாவது காதல்




ஏன் முறைக்கிறாய்
தமிழ் உனக்கு
வராது என்றாய்
தமிழ் நீ வா
என்றேன்

௦-௦-௦

கண்களால் நீ
கணிதம் பற்றி
பேசுவாய்
காதல் பற்றியெரியும்
எனக்கு

௦-௦-௦

நீ எழுதிய
எழுத்துக்கள்
தன்னை விட உன்னையே
அதிகம் ரசிக்கின்றன

௦-௦-௦

உன் கை புத்தகம்
பெரும் மோட்சம்
உன் பை புத்தகம்
பெறுவதில்லை என
என் முகபுத்தகம்

௦-௦-௦

நீ ஒரு கடினமான
வினாத்தாள்
காப்பியடிப்பதற்குள்
கையும் களவுமாக
எனை அணைத்துவிடு
௦-௦-௦


நல்லவனாகவே பதில்
சொல்லி அமர
விரும்பும் நான்
திருடனாகிவிகிறேன்
உனை பார்க்கும்
அரை நொடி

௦-௦-௦

மழைக்கு கூட
ஒதுங்காதவன்
காதலுக்காக
ஒதுங்கியவன்
நான்

௦-௦-௦

நீ ஒன்பது படித்து
பத்து ஆனாய்
நானோ உன்னை படித்து
பித்து ஆனேன்

Wednesday, August 1, 2012

கீழே விழுந்தவை..


இரண்டு எழுத்துகள் மட்டும் என்
கதையிலிருந்து
வெளியே குதித்து
என்னுடன் அருகே அமர்ந்து கொண்டது

என் நினைவுகள் செல்லும் வேகத்திற்கு ஈடு
கொடுத்து பறந்து வந்தன அவை
திடீரென மாய வலையில் சிக்க
என் நினைவுகளோ தண்ணீராய் கீழே சிந்தியது

பிழைத்தோம் என சிரித்தன
என் நினைவுகள்
பறக்க திரும்பும்போது என் கதையில்
அடுத்த இரண்டு
எழுத்துகளை காணோம்

0-0-0

பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது

கடலால் எழுதப்பட்ட காற்று ஒன்று
அருகில் சென்று தன் வார்த்தைகளை
அதனுடன் விளையாட கொடுக்கிறது

வண்டுகள் ஏமாறும் நேரம்
கள்ளக்காதலன் காற்றால்
இழந்து கொண்டிருக்கிறது கற்பை
இன்னுமொரு பிச்சியிடம்
விரும்பித்தான் என காற்று சொல்லும்
என்னிடம் நானும்
அதையே அப்படியே நம்புவேன்

பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது

0-0-0