நண்பர்கள்

Wednesday, June 27, 2012

கவிதைச்சரம்..


பூமியை
நிலவு சுற்றுகிறதாம்
அதெப்படி ?
நான் அல்லவா
இந்த நிலவை சுற்றுகிறேன்
தினமும் பூமியாய்…

**

தயவு செய்து
பேசும் போது என்னை
தட்டி விட்டு பேசு..
உன்னை பார்த்ததும்
ஆகி விடுகிறேன் சிலையாக …..

**

காற்றுக்கும் எனக்கும் சண்டை …
தொலைபேசியில் நீ தரும்
முத்தத்தை அது வைத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமல்லவா
தருகிறது எனக்கு

**

வெள்ளை நிறத்தில்
உடை அணிவார்களாம் தேவதைகள்
உடன்பாடில்லை எனக்கு
மஞ்சள் நிற தாவணியில் நீ

**

சிற்பிகள் உளியால் வடிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
உதடுகளால் வடிக்க
சிலையாய் நான்

No comments: