நண்பர்கள்

Monday, September 17, 2012

வெள்ளையாய் சில இரவுகள்



வேண்டிய அனைத்தும்
வரிசையாய் நிற்க
ஒவ்வொன்றாய்
நிறைவேற்றினாள்
குழந்தை
கோவிலில்

0-0

மதியம் மூணு மணி
வரை நிற்கும்
உணவு வரிசை
கொடுப்பவனுக்கு வயிறு
இல்லையோ என
சிந்திக்க வைக்கிறது
சாப்பிட்ட மனது
0-0

களித்து பேச
ஒன்றுமில்லா
தருணங்களில்
“மச்சான் அப்புறம்”
வந்து தாங்கி
நிற்கிறது இங்கே
பல நட்புகளை
0-0
சொல்ல விரும்பும்
பல வரிகள்
ஓரிரு சொல்லின்
முடிவிலேயே இறந்து
விடுவதால்
உணர்ச்சியற்ற உணர்வுகளால்
நிறமற்ற நீர் ஊற்றி
எழுதப்படுகிறது இங்கே
காதல் வரிகள்

0-0

சுகம் பெற்றபின்
தூர எறிவது வாடிக்கை
அவன் சில
வாக்குறுதிகளையும்
அவள் பல
வாய் சண்டைகளையும்

செவ்வாய் வாழ்த்துக்களுடன்

- மோகன் தாஸ்



Wednesday, September 12, 2012

நிழல் தேடும் வெயில்

எப்பொழுதும்
மௌனத்தை தாங்கும்
உன் நிழல் என்
பின்புலம் அறைய
நிறமற்ற வெளிகள்
அனைத்தும்
கிறுக்கும்
அழியா நாட்குறிப்புகளை
அடுக்கி வைத்து
உயிர் வாழ்வது
என் கடமை

-௦-௦-

வரிகள் வரைந்து
எழுதும் செப்புக்கவிதை
காற்றோடு கரைய
உன்னை பார்த்து
பூத்துக்கிடக்கும்
ஒற்றைக்கால் பூமி
தடவும் வெக்கமில்லா
மேகம் நான்
-௦-௦-

புரிந்து பேச நான்
அறிமுகமில்லா பிறைகவிஞன்
சிரித்து பேசி
களவு புரியும்
இடைதெரு
விலாக்கம்பனும்
நீயே என் பிச்சை என
ஒருவன் கருஅதிர கத்தும்
மீதியில்லா எச்சம்

-௦-௦-

சத்தமில்லா உடுப்பு
ஒன்றை
மேலே சாத்திவிட்டு
விளகினுள் எரியும்
திரி கதிரை விளக்கம் கேட்டு
குறி ஒன்றை
சொல்லி செல்லும்
அறுபது கிழவி
என்ன செய்வாள்
கூறு போட நான் இங்கே