ஒரு நிமிடமாவது
உன்னுடன் வாழ வேண்டும்
என்னுடைய அந்த வாழ்க்கையை...
நீயும் நானும் வாழ வேண்டியதாய்
என் உள் மனதில்
எத்தனையோ எண்ண ஓட்டங்கள்.
கடல் கரை ஓரம்
உன் கை கோர்த்து,
பாதம் நனைய ,
கால்கள் வலிக்க
பேசிக்கொண்டே நடக்க வேண்டும்.
காரணமில்லாமல் உன்னுடன் சண்டை போட்டு,
உன் கோபத்தை நான் ரசிக்க வேண்டும்,
சிறு வயது உப்பு மூட்டையாய் நீ இருக்க ,
நான் சுமக்க வேண்டும்,
உன் விரல் ஸ்பரிசங்களில்
நான் என்னை இழக்க உன்
ஒற்றை விரல் மோதிரமாய் இருக்க வேண்டும்.
உன்னை கவிதைகளால்
அலங்கரிக்க பட்ட தேரில் வைத்து ,
தினம் தரிசிக்கும் பக்தனாய் வாழ வேண்டும்.
உன் வெட்கத்தை திருடி,
பத்திரமாய் என் மனதில் ஒளித்து வைக்க வேண்டும்..
இப்படி எத்தனையோ முடிகின்ற ஆசைகள் ..
முடியாமல் போனது..
"மறந்து விடு என்னை"...
என்ற உன் ஒற்றை சொல்லால் ...
No comments:
Post a Comment