ஏன் முறைக்கிறாய்
தமிழ் உனக்கு
வராது என்றாய்
தமிழ் நீ வா
என்றேன்
௦-௦-௦
கண்களால் நீ
கணிதம் பற்றி
பேசுவாய்
காதல் பற்றியெரியும்
எனக்கு
௦-௦-௦
நீ எழுதிய
எழுத்துக்கள்
தன்னை விட உன்னையே
அதிகம் ரசிக்கின்றன
௦-௦-௦
உன் கை புத்தகம்
பெரும் மோட்சம்
உன் பை புத்தகம்
பெறுவதில்லை என
என் முகபுத்தகம்
௦-௦-௦
நீ ஒரு கடினமான
வினாத்தாள்
காப்பியடிப்பதற்குள்
கையும் களவுமாக
எனை அணைத்துவிடு
௦-௦-௦
நல்லவனாகவே பதில்
சொல்லி அமர
விரும்பும் நான்
திருடனாகிவிகிறேன்
உனை பார்க்கும்
அரை நொடி
௦-௦-௦
மழைக்கு கூட
ஒதுங்காதவன்
காதலுக்காக
ஒதுங்கியவன்
நான்
௦-௦-௦
நீ ஒன்பது படித்து
பத்து ஆனாய்
நானோ உன்னை படித்து
பித்து ஆனேன்
No comments:
Post a Comment