நண்பர்கள்

Monday, September 17, 2012

வெள்ளையாய் சில இரவுகள்



வேண்டிய அனைத்தும்
வரிசையாய் நிற்க
ஒவ்வொன்றாய்
நிறைவேற்றினாள்
குழந்தை
கோவிலில்

0-0

மதியம் மூணு மணி
வரை நிற்கும்
உணவு வரிசை
கொடுப்பவனுக்கு வயிறு
இல்லையோ என
சிந்திக்க வைக்கிறது
சாப்பிட்ட மனது
0-0

களித்து பேச
ஒன்றுமில்லா
தருணங்களில்
“மச்சான் அப்புறம்”
வந்து தாங்கி
நிற்கிறது இங்கே
பல நட்புகளை
0-0
சொல்ல விரும்பும்
பல வரிகள்
ஓரிரு சொல்லின்
முடிவிலேயே இறந்து
விடுவதால்
உணர்ச்சியற்ற உணர்வுகளால்
நிறமற்ற நீர் ஊற்றி
எழுதப்படுகிறது இங்கே
காதல் வரிகள்

0-0

சுகம் பெற்றபின்
தூர எறிவது வாடிக்கை
அவன் சில
வாக்குறுதிகளையும்
அவள் பல
வாய் சண்டைகளையும்

செவ்வாய் வாழ்த்துக்களுடன்

- மோகன் தாஸ்



No comments: