நண்பர்கள்

Wednesday, September 12, 2012

நிழல் தேடும் வெயில்

எப்பொழுதும்
மௌனத்தை தாங்கும்
உன் நிழல் என்
பின்புலம் அறைய
நிறமற்ற வெளிகள்
அனைத்தும்
கிறுக்கும்
அழியா நாட்குறிப்புகளை
அடுக்கி வைத்து
உயிர் வாழ்வது
என் கடமை

-௦-௦-

வரிகள் வரைந்து
எழுதும் செப்புக்கவிதை
காற்றோடு கரைய
உன்னை பார்த்து
பூத்துக்கிடக்கும்
ஒற்றைக்கால் பூமி
தடவும் வெக்கமில்லா
மேகம் நான்
-௦-௦-

புரிந்து பேச நான்
அறிமுகமில்லா பிறைகவிஞன்
சிரித்து பேசி
களவு புரியும்
இடைதெரு
விலாக்கம்பனும்
நீயே என் பிச்சை என
ஒருவன் கருஅதிர கத்தும்
மீதியில்லா எச்சம்

-௦-௦-

சத்தமில்லா உடுப்பு
ஒன்றை
மேலே சாத்திவிட்டு
விளகினுள் எரியும்
திரி கதிரை விளக்கம் கேட்டு
குறி ஒன்றை
சொல்லி செல்லும்
அறுபது கிழவி
என்ன செய்வாள்
கூறு போட நான் இங்கே

No comments: