நண்பர்கள்

Wednesday, June 27, 2012

காதல் ஸ்பெஷல் ..




1) ஓரப்பார்வை




அந்தி சாயும்

மஞ்சள் வெயில் பொழுதில்,

உன் தோழிகளை போக சொல்லிவிட்டு

எனக்கு மட்டும் தெரியும்படி

ஓரமாய் நீ காட்டும்

அந்த ஒற்றை பார்வைக்காக

எழுதி வைக்கலாம் இந்த

ஈரேழு உலகத்தையும்



2) எப்படி எழுத



திடீரென்று என்னை பார்த்து

சிணுங்கலாய் கேட்டாய்

கவிதை எழுதுவது எப்படி என்று..

நான் சொன்னேன்

நீ கேட்கும் அழகே

தனி கவிதையென்று….

வெட்கத்தில் சிவந்தது

நம் காதல்



No comments: