நண்பர்கள்

Thursday, July 5, 2012

மீள் சட்டையும் கறுப்பு மின்னலும்..


அரை கை சட்டை தைக்கும் போது தான்

அது நடந்திருக்க வேண்டும்

அவனுக்கு அந்த ஞாபகம் வந்தது

சட்டை துணி வெகுண்டெழுந்து நீள்கிறது


இரு கைகளால் தடுத்து பார்த்தான் முடியவில்லை

மீறி செல்கிறது நீருடைப்பை போல

முடிவில் வெகு தொலைவில் ஒரு

காய்ந்த மரத்தின் இலையின்

கைகள் பட்டு நீள்வது முடிந்து போகிறது


மூச்சிரைக்க ஓடி வந்து நின்று

முழுவதும் நிறைத்திருந்த கருப்பு காற்றை

வேகமாய் விலக்க அங்கே

காய்ந்த இலை இல்லை கருப்பு நிற மரமில்லை



கை நீளும் துணியில்லை

நிற்பது தரையுமில்லை

கருப்பு நிற இடி ஒன்றை

வெண்மேகம் வீசி விட்டு செல்லும்

திடுக்கிட்டு விழித்தெழுந்தான் பின்னிரவில்

தண்ணீர் சொம்பு தறிகெட்டு சிரிக்கும்

நடப்பதெல்லாம் தினமும் சகஜம்……



Communities Tagged : Poetry-Stories


1 comment:

பிரவின் said...

DAI !! ENGA DA POITTU IRUKKIRA !! I NEED SOME CLARIFICATION REGARDING THE POEM !! WILL CALL U