கோவில் படிகளில் இறங்கும்போது
இரண்டு ரூபாய் நாணயம்
உருண்டோடுகிறது,
சத்தம் கேட்டு
என்னை யாரும் பார்த்ததாய் தெரியவில்லை
பின்பக்க தலை அடிபட்டு அது
ரத்தம் சொட்ட சுழல்கிறது
அப்பொழுதும் யார் கண்ணிலும் படவில்லை
என்னை பார்த்து பயந்து விட்டதாய்
அதன் முகம் காட்டியது
முகத்தை குழந்தையாய்
வைத்துகொண்டு சமாதானம் சொல்ல
முயலுவேன்
அது பொய்யான நடிப்பு என்பதை எப்படியோ
உணர்ந்து கொண்ட நாணயம்
ரத்தம் சொட்ட மீண்டும் உருளுகிறது
முடிவில் ஒரு குட்டையில் விழுந்து
காட்டுகிறது அதன்
வெற்றிசிரிப்பை
இன்னும் என்னை யாரும் பார்க்கவே இல்லை
அவர்கள் பார்த்திருக்கலாம்
No comments:
Post a Comment