யாருமற்ற வீட்டில்
ஆர்ப்பாட்டமாய் மாநாடு
இனிதே தொடங்கிது
அழைப்புமணியின் வரவேற்புரையுடன்
மின்விசிறி காற்றுபொழிவாற்ற
தொலைகாட்சி சத்தமாய் தலைமையுரை
தலைப்பு நன்றி விளக்க பொதுகூட்டம் மின்சாரத்திற்கு
அணைத்து வயர்களும் வரிசையாய் வாழ்த்து
நன்றி உரையை மின்விளக்கு முடிக்கும் போது
திடீரென மின்வெட்டு வெடித்து
அனைத்தும் உயிரிழந்தது இன்று
இரண்டு மணி நேரம் மின்சார அஞ்சலி
நாளை மீண்டும் மாநாடு
பக்கத்துக்கு வீட்டில்
No comments:
Post a Comment